நீதிமன்றம்வரை சென்ற பிளவுஸ் பிரச்சனை., இதுக்கு கூடவா நீதிமன்றம் போவாங்க?

அகமதாபாத், அன்கூர் பகுதியைச் சேர்ந்த பூனம்பென், நவம்பர் 2024ல் தி டிசைனர் ஷாப் என்ற கடையில் ஒரு பிளவுஸ் தைக்கக் கொடுத்திருந்தார். டிசைனர் பிளவுஸ், தன்னுடைய நெருங்கிய உறவினரின் திருமணத்திற்கான பண்டிகைக்காக, டிசம்பர் 24, 2024 அன்று தயாராக வேண்டும் என்று அவர் கடைக்கு தெரிவித்திருந்தார். மேலும், அந்த பிளவுஸ் தைக்க முன்னதாக ₹4,395 அட்வான்ஸ் தொகையும் செலுத்தினார்.

கடைக்கு சென்றபோது, பூனம்பெனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அவர் ஆர்டர் செய்த பிளவுஸ் தயாராக இல்லாததோடு, அதற்கான டிசைனில் பல குறைபாடுகள் மற்றும் கறைகள் காணப்பட்டன. சொன்ன நேரத்தில் பிளவுஸ் சரியாக வழங்கப்படவில்லை.

இதனால் அந்த பெண், திருமணத்திற்கு வேறு ஆடை அணிந்து விழாவில் பங்கேற்றார். இதன் பின்னர், அவர் கொடுத்த ₹4,395 தொகையை திருப்பி வாங்குமாறு கேட்டார், ஆனால் டெய்லர் இதற்கும் மறுத்து, பிளவுஸை எடுத்துக் கொள்ளவும், பணம் திருப்பி கொடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.

இது பூனம்பெனுக்கு மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்தை உண்டாக்கியது. இதையடுத்து, அவர் அகமதாபாத் மாவட்ட நுகர்வோர் புகார் தீர்ப்பு கமிஷனில் 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் புகார் பதிவு செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் பூனம்பெனின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ₹5,000 மற்றும் சட்டபூர்வமான செலவுகளுக்கு ₹2,000, மொத்தம் ₹11,500 தொகை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

Related News

Latest News