எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘பாகுபலி’. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி 2 வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக “பாகுபலி தி எபிக்” என்ற பெயரில் நேற்று வெளியானது.
இப்படம் இந்தியாவில் இருந்து ரூ.10.4 கோடி நிகர வசூல் செய்துள்ளது. இந்தியாவின் மொத்த வசூல் ரூ.12.35 கோடி. வெளிநாடுகளில் இருந்து மேலும் ரூ.4 கோடி. இதன் மூலம் உலகளவில் முதல் நாள் வசூல் ரூ.16.35 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
