இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவினர் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள நாசா கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட், இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில் நான்கு பேர் கொண்ட ஆக்ஸியம்-4 குழு, டிராகன் விண்கலத்தில் பயணித்து, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம் சுபான்ஷு சுக்லா, ISS-க்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த குழு அடுத்த 2 வாரங்கள் ISS-ல் தங்கி, 7 விதமான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.