ஆசிய நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்புத் தொழில்களை வலுப்படுத்த சமீப நாட்களில் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதே வேளையில், தங்கள் வெளிநாட்டு தொழில்துறை நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் தயார் நிலையில் இருக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சமீபத்தைய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
குறிப்பாக 2022 மற்றும் 2024 க்கு இடையில் பாதுகாப்பு கருவிகளின் கொள்முதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு 2.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை இவற்றுக்கு செலவிடும் தொகை 10.5 பில்லியன் டாலரை தொட்டிருப்பது சற்று பதற்றத்தையே கொடுக்கிறது.
நப்பு நாடுகளுடன் கூட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் எப்போதும் எளிதானவை அல்ல என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை தயாரிப்பதில் ரஷ்யாவுடனான இந்தியாவின் இருபது ஆண்டு கால ஒத்துழைப்பிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யா சீனாவுடன் நெருக்கமானால் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவதற்கு அது முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதும் குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட சூப்பர்சோனிக் வகைக்காக ரஷ்யா சீனாவை நாடினால் இந்தியாவுடனான உறவு ஆட்டம் கண்டுவிடும் என்பதும் நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் சீனாவின் NORINCO ஆயுத நிறுவனம் மற்றும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.