இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற ஆதார் முக்கிய ஆவணம் ஆகும். இந்த ஆதாரை அடையாளச் சான்றாக பயன்படுகிறது. சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பெற்றிருப்பதால், பலருக்கும் தகவல்களில் மாற்றங்கள் என சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இந்த ஆதார் மாற்றங்களைப் புதுப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. அதாவது இலவசமாகப் புதுப்பிக்க 14ம் தேதி அதாவது இன்று கடைசி நாள் ஆகும்.
ஆதார் அட்டைதாரர்கள் ஜூன் 14, 2025 வரை அதாவது இன்று வரை மட்டுமே அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணையதளம் வழியாக இலவசமாகப் புதுப்பிக்க முடியும். அதன் பிறகு, ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
UIDAI விதிகளின்படி, ஆதார் தாரர்கள் தங்கள் தகவல்களைச் சரியாக வைத்திருக்க, பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் அடையாளச் சான்று POI மற்றும் முகவரிச் சான்று POA ஆகியவற்றைப் புதுப்பிக்க வேண்டும்.
சரி, இணையதளம் வழியாக இலவசமாகப் புதுப்பிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் ?
முதலில் UIDAI இணையதளத்திற்குச் சென்று My Aadhaar பக்கத்திற்குச் சென்று, 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
பின்னர், பதிவுசெய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். உள்நுழைந்த பிறகு, தற்போதைய POI மற்றும் POA ஆவணங்களைச் சரிபார்க்கவும்.புதுப்பிக்க வேண்டுமென்றால், ‘ஆவணப் புதுப்பிப்பு’ என்பதைக் கிளிக் செய்யவும். புதுப்பிக்க வேண்டிய ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து, தெளிவான ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
பிறகு, கோப்புகள் JPEG, PNG அல்லது PDF வடிவத்திலும், 2MBக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்…விவரங்களைச் சரிபார்த்து, புதுப்பிப்பு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். புதுப்பிப்பின் நிலையை அறிய, SRN எண்ணை அதாவது Service Request Number குறித்து வைத்து கொள்ளவும்.. புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் 10 அல்லது அதுக்கும் குறைவான நாள்களில் அப்டேட் ஆகிவிடும்.