RBI என்பது ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) என்பதன் சுருக்கம். இது இந்தியாவின் மத்திய வங்கியாகும்… மக்களின் வசதிக்கேற்ப அவ்வப்போதும் ஏதேனும் சலுகைகளை கொண்டும் வரவும்…அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கி முடிவு ஒன்றை எடுத்துள்ளது… அதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
RBI தங்க நகைக் கடன்களை எடுப்பதற்கான விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சிறிய கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. உண்மையில், ரூ.2.5 லட்சம் வரையிலான தங்கக் கடன்களுக்கான கடன்-மதிப்பு அதாவது Loan-to-Value – வின் விகிதத்தை 75 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாம்.
அதாவது,ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடமானம் வைத்தால், முன்பு ரூ.75,000க்கு கடன் பெறுவீர்கள், இதற்கு பதிலாக , இப்போது ரூ.85,000 வரை கடன் பெறுவீர்கள் என்று அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தங்கக் கடன்களை வழங்கும் நிறுவனங்களின் பங்குகளில் ஒரு பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது . தங்கக் கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸின் பங்குகள் 7 சதவீதம் உயர்ந்து ரூ.2470 ஆக இருந்தது. மற்றும், மணப்புரம் ஃபைனான்ஸின் பங்குகளும் 5 சதவீதம் உயர்ந்து விலை ரூ.246.48 ஐ உயர்த்தியுள்ளது. IIFL Finance பங்குகள் 4.50 சதவீதம் உயர்ந்து ரூ.452.45 அளவை தொட்டுள்ளதாக கூறப்படுகின்றன.மேலும் தகவல்களுக்கு அந்தந்த நிறுவனங்களை அணுகி முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ளவும்.