234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டிற்கு அடுத்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 23-ஐ பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், அனைத்துத் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பணி நிமித்தமாக வாக்களிக்க முடியாமல் போவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
