Wednesday, December 24, 2025

நெருங்கி வரும் புயல் : இன்று 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News