Saturday, June 7, 2025

அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசி அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்

ஆந்திராவில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு முன்னோட்டமாக, ஆந்திர பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நிடமனூர் உயர்நிலை பள்ளியில், 12 நாட்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சியில் பங்குபெற்ற மாணவர்கள், தங்கள் தன்னம்பிக்கை வளர்ந்து இருப்பதாகவும், ஆங்கிலம் கற்கும் ஆர்வமும் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பயிற்சியில் கலந்து கொண்ட மாணாக்கர்கள் சரளமாக அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசி அசத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news