இந்தியா, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தனது பாதுகாப்பு திறனை மேம்படுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், அமெரிக்காவின் முக்கிய ஆயுத உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்ட்டின், இந்தியாவுக்கு F-21 என்ற புதிய 4.5ம் தலைமுறை போர் விமானத்தை வழங்க முன்வந்துள்ளது.
இந்த விமானம், இந்திய விமானப்படைக்கு நவீன தொழில்நுட்பத்தோடு, தகுந்த விலையிலும் கிடைக்கப்போகிறது. ஏற்கனவே லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் உலகின் முன்னணி 5ம் தலைமுறை விமானமான F-35ஐ தயாரித்து வருகிறது. அதே நிறுவனத்திலிருந்து வந்துள்ள F-21 என்பது, அதே தரத்தில் நெருக்கமாக இருக்கும் ஒரு அப்டேட் ரகமாகும். ஆனால் விலைப் பார்த்தால் பெரிய வித்தியாசம் – F-35 க்கு 150 மில்லியன் டாலர் ஆனால், F-21க்கு 100 மில்லியன் மட்டுமே.
உலக நாடுகள் 5ம் தலைமுறையை நோக்கி செல்வது உண்மைதான். ஆனால் போர் என்றால் அந்த விமானங்களின் குணம் மட்டும் முக்கியமல்ல, எண்ணிக்கையும் மிகவும் முக்கியம். இந்தியா தற்போது வைத்துள்ள மிகப் பெரிய பலம், ரஃபேல் அல்ல. ரஷ்யா தயாரித்த Su-30MKI தான். ஏன்? ஏனெனில் 259 விமானங்கள் நம்மிடம் இருக்கின்றன. எண்ணிக்கை என்பதுதான் இந்திய விமானப்படையின் பக்க பலமாக உள்ளது.
இது ஒரு சிக்கலான யோசனை. உயர்தர விமானங்கள் சில இருக்கட்டும், ஆனால் எண்ணிக்கையிலான நம்பகமான விமானங்கள் இருந்தால்தான் போரில் வெற்றி பெற முடியும். அதனால்தான், F-21 மாதிரியான 4.5ம் தலைமுறை விமானங்களை அதிகமாக வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்.
மேலும், இதை இந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து உற்பத்தி செய்யும் திட்டம் இருப்பதால், தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு என பல நன்மைகளும் இருக்கிறது.