“உயிர் காப்பான் தோழன்” என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அப்படித்தான் இந்தியா எந்த நேரத்திலும் அமெரிக்காவை நடப்பு ரீதியிலேயே பார்த்து வந்தது. ஆனால் அமெரிக்காவின் சமீபத்தைய நடவடிக்கைகள் கங்கணம் கட்டிக்கொண்டு இந்தியாவை எதிர்ப்பதாகவே உள்ளன. இந்நிலையில் இந்தியா இனியும் அமெரிக்காவை நம்ப கூடாது என்றும் அமெரிக்கா இந்தியாவின் முதுகில் குத்திவிட்டது என்று சர்வதேச அரசியல் வல்லுனர் பிரம்மா செல்லனி குறிப்பிட்டிருப்பது “கூடா நட்பு கேடாய் முடியும்” என்பதையே நினைவுக்கு கொண்டு வருகிறது.
தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கு முன் பைடன் என இருவருமே அமெரிக்கா இனியும் இந்தியாவின் நட்பு நாடு இல்லை என்பதை தங்கள் நடவடிக்கைகள் மூலம் சொல்லாமல் சொல்கின்றனர். முன்னதாக பைடன் தான் பாகிஸ்தானுக்கு F-16 போர் விமானங்களை அளித்து அந்நாட்டின் ராணுவத்தின் பலத்தை அதிகரித்துவிட்டார் என்பது கசப்பான உண்மை.
அடுத்து வந்த டொனால்ட் டிரம்ப்-பின் நிலைப்பாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இருப்பதை பார்க்க முடிகிறது. பொருளாதாரத்தில் தரைதட்டிய பாகிஸ்தான் தங்களுக்கு 8,500 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. அந்த நேரத்தில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிதி வழங்க ஒப்புக்கொண்டு வாக்களித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
அதன்பின் டிரம்ப் இப்போது ‘இந்தியா – பாக். போர் நிறுத்தம் என் தலையீட்டால் தான் கைகூடியது’ என்று கூறிக்கொள்வதும் இந்தியாவுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட காரணங்களால் அமெரிக்கா இந்தியாவின் முதுகில் குத்திவிட்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர் பிரம்மா செல்லனி குறிப்பிட்டிருப்பது ‘இந்தியா இனியும் அமெரிக்காவிடம் நப்பு பாராட்டக்கூடாது என்பதையே Highlight செய்கிறது.