தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
இந்நிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்த பலர், சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘வேல்’ பரிசாக அளித்தனர்.