Thursday, January 15, 2026

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? – போஸ்டர் அடிக்கும் அதிமுக

சமீபத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில் ரூ1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் அதிமுகவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வருகின்றனர். “1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?” என கேட்டு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

Related News

Latest News