பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க குனார் நதியில் புதிய அணை கட்டப்படும் என்று ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் குனார் நதி பாய்கிறது. இந்த நதியின் 70 சதவீத தண்ணீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இதை தடுக்க குனார் நதியில் புதிய அணையை கட்ட ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்திருக்கிறது.
குனார் நதியில் புதிய அணையை கட்ட திட்டமிட்டு உள்ளோம். இதற்கான களஆய்வு நடத்தப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அணையின் மூலம் ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ,ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும், இந்த அணையால் நாட்டின் உணவு தானிய உற்பத்தி, மின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் எனவும் ஆப்கானிஸ்தான் நீர்வளத் துறை அமைச்சர் முல்லா அப்துல் லத்தீப் மன்சூர் கூறியுள்ளார்.
குனார் நதி தொடர்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும், எனவே எவ்வித பிரச்சினையும் இன்றி நதியில் பிரம்மாண்ட அணையை கட்டுவோம். பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
