பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது : திறமைசாலிகள் நம்மைவிட்டு பிரியும்போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும். ரஹ்மான் எங்கையாவது வெளியூர் சென்றால் சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு திறமை இருந்தது. அவரின் இறப்பு மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
