தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிய அஜிதா ஆக்னலுக்கு பொறுப்பு வழங்காமல், சாமுவேல் என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு புஸ்ஸி ஆனந்த் பொறுப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் நீலாங்கரையில் இருந்து பனையூர் அலுவலகத்திற்கு காரில் வந்த விஜயை தடுக்க முயன்றார். ஆனால் காரை நிறுத்தாமல் மெதுவாக மோதியபடி சென்றது.
கட்சி அலுவலகத்தை சுற்றி பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரப்பான சூழல் நிலவியுள்ளது.
