Saturday, June 14, 2025

55,000 ஆண்டுகள் ஒளிந்த பழங்குடி! உலகமே அறியாத மர்மம்!

உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் உலகிற்குத் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள இருள் சூழ்ந்த மழைக்காடுகளில் வாழும் கொரோவாய் பழங்குடியினர்.

இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். உலகத்தை ஆச்சரியப்பட வைக்கும் வாழ்க்கை முறை இவர்களுக்கு உண்டு. மரங்களின் மீது வீடுகளை கட்டும் பழக்கத்துக்காகவே இவர்கள் பிரபலமானவர்கள். தரையில் இல்லாமல், பத்துமீட்டர் முதல் ஐம்பதுமீட்டர் உயரத்தில் மரங்களின் மீது முழு கிராமத்தையும் அமைத்திருப்பது, நாம் பார்த்ததில்லாத விசித்திரம்.

இவர்கள் வீடுகள் இலைகளால் மூடப்பட்டு, வலுவான மரத் தண்டுகளால் தாங்கப்பட்டிருக்கின்றன. இது ஏன் தெரியுமா? வெறும் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்றல்ல. பாதுகாப்புக்காக அப்படி செய்திருக்கிறார்கள். இவர்களை எதிர்மறையாக பார்ப்பவர்களிடமிருந்து தங்களை காக்கவே, இப்படி உயரத்தில் வீடுகளை கட்டுகிறார்கள்.

1970-களுக்குப் பிறகுதான், கொரோவாய் மக்களுக்கு உலக மக்களைப் பற்றித் தெரிந்தது. அதற்கு முன்னர், அவர்கள் தான் பூமியில் வாழும் ஒரே மனிதர்கள் எனவே நம்பினர். இன்றும் கூட, சில கொரோவாய் குழுக்கள் வெளிநாட்டு மனிதர்களை பார்த்ததே இல்லையாம். இருப்பினும், சிலர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மிஷனரிகளுடன் மெதுவாக தொடர்பில் வரத் தொடங்கியுள்ளனர்.

இவர்கள் காட்டை நம்பி வாழ்கின்றனர். மீன்களை வேட்டையாடுகிறார்கள். காட்டிலிருந்து சவ்வரிசி போன்ற உணவுகளை சேகரிக்கிறார்கள்.

“First Contact”, “Human Planet” போன்ற ஆவணப்படங்களில் இவர்களின் வாழ்க்கை அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலுஃபோ என்றும் அழைக்கப்படும் இந்த பழங்குடியினர் பப்புவாவின் தென்கிழக்குப் பகுதியில் வசிக்கின்றனர். இவர்களின் மக்கள்தொகை 4,000 முதல் 4,400 வரை இருக்கிறது என மதிப்பிடப்படுகிறது.

உலகம் இன்னும் முழுமையாக கண்டறியாத அற்புதங்களின் நிஜமான சான்றுகளே கொரோவாய் மக்கள்.

உலகின் மிகவும் அறியப்படாத பழங்குடியினரான இவர்கள் , 55,000 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களைச் சந்தித்த… வாழும் நரமாமிச உண்ணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news