Tuesday, January 27, 2026

திண்டுக்கல்லில் ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி விபத்து : 10 பேர் காயம்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, சேலத்தை நோக்கி ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் மீது அடையாளம் தெரியாத லாரி மோதியது. இதனால் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியது.

இந்த விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related News

Latest News