Saturday, May 31, 2025

‘டிரம்ப்’ கைக்கு வந்த பெரும் ஆயுதம்! அமெரிக்காவை உலுக்கப் போகும் பேராபத்து!

டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக நாடுகளுக்கு ஒரு கடும் அதிர்ச்சியளிக்கும் முடிவு எடுத்தார். யார் அமெரிக்கா மீது எவ்வளவு வரி விதிக்கிறார்கள் என்றால், அதே அளவு அமெரிக்காவும் அவர்கள்மீது வரி விதிக்கும் என்று அறிவித்தார். இதையே ரெசிப்ரோகல் வரி என்று சொல்கிறோம்.

இந்த வரி அமெரிக்கா பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக அவர் சொல்லித் திரிந்தார். ஆனால், இது உலக நாடுகளுக்கு பெரிய சவால்! இந்தியா உட்பட பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டன.

இதற்கு எதிராக அமெரிக்க வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம், டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாக கூறி, இந்த வரிகளுக்கு தடை விதித்தது.

ஆனால், டிரம்ப் நிர்வாகம் இதை ஏற்கவில்லை. மேல்முறையீடு செய்தது. அதன் காரணமாக, மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த தடையை ஒரே நாளில் நீக்கி, ரெசிப்ரோகல் வரிகள் மீண்டும் அமலில் வந்தன.

டிரம்ப் தரப்பில் முக்கியமான வாதம் – இது வெறும் வரி விவகாரம் அல்ல, இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயம் என்பதாகும். அதனால்தான் இந்த தடையை நீக்க வினவப்பட்டது.

இப்போது வழக்கு தொடர்ந்தவர்கள் ஜூன் 5ம் தேதி வரை பதிலளிக்க வேண்டும், டிரம்ப் நிர்வாகமும் ஜூன் 9ம் தேதிக்குள்  விரிவான பதிலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவை எல்லாம் அமெரிக்கா உலக நாடுகளுக்கு வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை கட்டாயப்படுத்தும் ஒரு முயற்சி. அதற்காக, பிரிட்டன் முதல் நாடாக அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்னும் மூன்று நாடுகள் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ரெசிப்ரோகல் வரி, டிரம்ப் சொல்வது போல் அமெரிக்க பொருளாதாரத்துக்கு நன்மை தருமா? இல்லையெனில், இதுவே அமெரிக்காவுக்கே பேராபதமா? இது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது.

திறமையான ஒரு தலைவர் எப்போது எவ்வாறு முடிவு எடுப்பார் என்பதற்கு இது ஒரு முக்கிய போர். இந்த போர் வெற்றி பெற்றால், அமெரிக்கா உலக பொருளாதாரத்தில் மீண்டும் முன் நிற்கும். தோல்வியடைந்தால், அது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரிய தாக்கமாக மாறும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news