Saturday, August 2, 2025
HTML tutorial

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடைகளை அணிய தடை

சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடைகளை அணிய தடை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பெர்ன், சுவிட்சர்லாந்தில், மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடைகளை அணிய தடை விதிக்க 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் என 51 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்குப் பிறகு, அந்நாட்டு அரசு 2022ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அந்த சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தை மீறி பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்தால், 100 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்படும். அபராத தொகையை உடனடியாக செலுத்தாவிட்டால், 1000 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்ச ரூபாய்) அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News