சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: புதிய பஸ்கள் சேவை தொடக்கம்…

சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் பொதுமக்களின் வசதியான பயணத் தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

இதில், மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.234.50 கோடி செலவில் 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், ஏற்கனவே ரூ.697 கோடி செலவில் 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.1,337 கோடி மதிப்பில் 750 புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளை 7 பணிமனைகள் மூலம் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய பேருந்துகள் சென்னை விமான நிலையம்–கிளாம்பாக்கம், விமான நிலையம்–சிறுசேரி, விமான நிலையம்–அடையார், செங்குன்றம்–கிண்டி, கோயம்பேடு–சிறுசேரி, அம்பத்தூர்–வேளச்சேரி, பல்லாவரம்–செங்கல்பட்டு, பல்லாவரம்–மாமல்லபுரம், கோயம்பேடு–கிளாம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இதன் மூலம் சென்னையில் பொதுப் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், பயணிகளுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய வசதியான பயணமும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தும் கிடைக்கும்.

Related News

Latest News