Thursday, December 25, 2025

மாதம் ரூ.5,500 வழங்கும் சூப்பரான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்

பெரும்பாலான மக்கள், தங்கள் கடின உழைப்பில் ஈட்டிய பணத்திற்கு பாதுகாப்பும் உறுதியான வருமானமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நம்பகமான முதலீட்டு வாய்ப்புகளைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள். அதனால், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கும் சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே அதிக நம்பிக்கையை பெற்றுள்ளன.

சரியான நேரத்தில் முதலீடு செய்தால், மாதந்தோறும் உறுதியான வருமானத்தை வழங்கும் திட்டங்களைத் தேர்வு செய்ய முடியும். அத்தகைய திட்டங்களில் முக்கியமான ஒன்று தபால் அலுவலகம் வழங்கும் மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme). இதில் ஒருமுறை ஒரு தொகையை முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்.

இந்த திட்டத்தை 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் தொடங்கலாம். இது அரசு ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், முதலீடு முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வட்டியைப் பெறுகிறார்.

தற்போது இந்த திட்டத்தில் 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டு காலம் 5 ஆண்டுகள். கணக்கைத் தொடங்கிய முதல் ஒரு வருடத்திற்குள் பணத்தை எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 வைப்பு நிதியுடன் கணக்கைத் தொடங்கலாம். ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்காக இருந்தால், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஒரு கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக மூன்று பேர் சேர்ந்து கணக்கு தொடங்கலாம்.

ஒரு தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் சுமார் ரூ.5,500 வருமானம் கிடைக்கும். அதேபோல், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் சுமார் ரூ.9,250 வருமானம் பெறலாம்.

5 ஆண்டுகள் முடிந்ததும், முழு முதலீட்டுத் தொகையும் திரும்பக் கிடைக்கும். விரும்பினால், அதனை மீண்டும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

Related News

Latest News