வெறும் 10 நிமிடம் போதும்., வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு முழுவதும் 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்து பரிமாற்றப்பதிவு, திருமணப்பதிவு, கடன் ஆவணங்கள் பதிவு உள்ளிட்ட பல ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

மக்கள் எளிதாக பத்திரப்பதிவு செய்யவதற்கு ஏதுவான வசதிகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் மக்கள் வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு சேவைகளை விரைவாக பெற முடியும். புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் அல்லது மனைப்பிரிவுகளின் விற்பனை மற்றும் வாங்குதலுக்கான பதிவு அனைத்து விவரங்களையும் (பெயர், முகவரி, சொத்துத் தகவல்கள்) மென்பொருள் மூலம் பதிவேற்றியதும் தானாக பத்திரங்கள் உருவாகும்.

இதற்கு நடைமுறைப்படுத்தும் நேரம் 10 நிமிடங்களுக்கு குறைவாக இருக்கிறது. இதனால் பத்திரப்பதிவு செய்ய அவசியமான சுற்றுலா, காத்திருப்பு போன்ற சிரமங்கள் நீங்கி, மக்களுக்கு எளிதான வசதி கிடைக்கும்.

Related News

Latest News