தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்காக இந்திய ரெயில்வே ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும். இந்த ஓ.டி.பி சரிபார்ப்பு முறை விரைவில் அனைத்து ரெயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
ஐ.ஆ.ர்.சி.டி.சி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரயில்வே கவுன்ட்டர் உட்பட அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும்.
