நடுரோட்டில் புலி., திகைத்து போய் நின்ற வாகன ஓட்டிகள்.!

மஹாராஷ்டிராவின் சந்த்ராபூர் மாவட்டத்தில், தடோபா புலி சரணாலயத்துக்கு அருகே உள்ள சந்த்ராபூர்–மொஹர்லி சாலையின் நடுவே புலி ஒன்று அமர்ந்திருந்தது. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் முழுமையாக நின்றுபோனது. சுற்றுலா பயணிகள் மற்றும் கிராமவாசிகள் அனைவரும் தங்கள் வாகனங்களுக்குள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

இப்பகுதியைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் இங்கு அடிக்கடி விலங்குகள் சாலையில் வருவது வழக்கமான ஒன்றாகவே உள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

Related News

Latest News