Saturday, December 27, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 1) திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுவதால் இன்று பள்ளிகள் செயல்படாது.

முதலில், வடகிழக்கு பருவமழையால் 22-வது தேதி பள்ளிகள் வழக்கம் போல இயங்கவில்லை. அதற்காக, இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தனர்.

ஆனால், தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவின்படி, அந்த வேலை நாளுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

Related News

Latest News