Monday, December 22, 2025

ரூட்டை மாற்றிய விஜய்., கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலியா?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில், கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து தனியார் அரங்கில் வைத்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதகத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், விஜய் மீண்டும் களப்பணிக்கு திரும்ப உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மக்கள் சந்திப்பு, ரோடு ஷோக்களை தவிர்த்து விட்டு பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்று பேச விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

Latest News