Tuesday, October 7, 2025

அலறவிடும் தங்கத்தின் விலை! ரூ.11,000-ஐத் தாண்டிய ஒரு கிராம்! சவரன் ரூ.90,000-ஐ நெருங்கி புதிய உச்சம்! மேலும் உயருமா?

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்க விலை அக்.7ம் தேதியான இன்று  புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.90,000-ஐ நெருங்கியுள்ளதால், மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய அரசியல் பதற்றங்கள் ஆகியவை தங்க விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக, அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்திருப்பது, ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது, உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் ஆகியவை தங்க விலையை மேலும் உயர்த்தியுள்ளன.

இதன் விளைவாக, சென்னையில் இன்று காலை தங்க விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்தது. தற்போது ஒரு கிராம் ரூ.11,200 என்றும், ஒரு பவுன் ரூ.88,600 என்றும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.648 உயர்ந்து ரூ.97,744-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.74,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.167 என்ற நிலை தொடர்கிறது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதும், ஐப்பசி மாதத்தில் சுப தினங்கள் அதிகமாக இருப்பதும், தங்க விலையை மேலும் உயர்த்தும் என்று வணிக வல்லுநர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.75 என்ற அளவுக்கு சரிந்திருப்பதே, தங்கம் விலை அதிகரிக்கச் செய்த முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

மொத்தத்தில், பண்டிகை காலத்தையும் பொருளாதார சூழலையும் பயன்படுத்தி தங்க விலை இன்னும் மேலே செல்லும் வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News