Tuesday, September 30, 2025

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பொறுப்புகள் பறிப்பு

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் செங்கோட்டையன். இது தொடர்பான நடவடிக்கையை 10 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். செங்கோட்டையன் கெடு விதித்த மறுநாளே, அவரது கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கட்சி பதவி தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News