Saturday, September 27, 2025

EPFO பயனாளர்களுக்கு Happy நியூஸ்! 2026-க்குள் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்! முழு தகவல் இங்கே!

ஊழியர்கள் பங்களிப்பு நிதி நிறுவனம் அதாவது EPFO சந்தாதாரர்கள், தங்களது EPF வைப்புத் தொகையில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதிக்காக இன்னும் சில மாதங்களே காத்திருக்க வேண்டியிருக்கும். ஜனவரி 2026க்குள் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் தெரிவித்துள்ளன.

EPFOவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய அறங்காவலர் குழு அதாவது CBT தனது அடுத்த கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்க இருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரத்தில் கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் உள்கட்டமைப்பு தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சந்தாதாரர்களுக்கு எவ்வளவு தொகை எடுக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

தற்போது EPFOவின் மொத்த நிதி ரூ.28 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 78 மில்லியன் சந்தாதாரர்கள் பங்களித்து வருகிறார்கள். 2014ஆம் ஆண்டு 7.4 லட்சம் கோடி நிதியுடன் 33 மில்லியன் சந்தாதாரர்களாக இருந்தது, இன்று எண்ணிக்கையும் நிதியும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் EPFO, தானியங்கி உரிமைகோரல் தொகை வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது. சந்தாதாரர்களின் வசதிக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவு, முழுக்க அமைப்பு அடிப்படையில் செயல்படுகிறது. புதிய ஏடிஎம் வசதி, குறிப்பாக அவசரகாலங்களில் ஊழியர்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

ஜூலை 2025 மாதத்தில் மட்டும் 9.79 லட்சம் புதிய உறுப்பினர்கள் EPFOவில் இணைந்துள்ளனர். இவர்களில் 61% பேர் 18-25 வயது இளைஞர்கள். மாநில அளவில், மகாராஷ்டிரா 20% க்கும் மேற்பட்ட பங்களிப்புடன் முதலிடம் வகிக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News