Friday, September 12, 2025

உங்களிடம் PF Account இருக்கா?.., தீபாவளி பண்டிகை பரிசாக வரப்போகும் புது வசதி

மத்திய அரசு தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை இயக்கி வருகிறது. இதில் தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை, பணியாளரும் தொழிலாளரும் சேர்ந்து செலுத்துகிறார்கள்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தற்போது வழங்கும் டிஜிட்டல் சேவையை மேலும் மேம்படுத்த, புதிய நவீன அம்சங்களுடன் முன்னெடுத்துச் செல்ல திட்டமிடுகிறது. அந்த வகையில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், வருங்கால வைப்பு நிதி கணக்கை யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து, செவிலியப் பொருளாகவே வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை வரவுசெய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை பரிசாக இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் அக்டோபர் 10, 11-ஆம் தேதிகளில் அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறும். இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News