இன்றைய மாறிவரும் உலகத்தில் நிதி பாதுகாப்பு மிகவும் அவசியமாகியுள்ளது. குழந்தைகளின் கல்வி, எதிர்கால தேவைகள் போன்றவற்றை மனதில் வைத்து, பலர் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு திட்டங்களைத் தேடுகிறார்கள். அவர்களுக்காக தபால் அலுவலகத் தொடர்ச்சியான வைப்புத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை சேமிக்கலாம். இது எப்படி செய்முறை என்று இங்கே பார்க்கலாம்.
நீங்கள் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், மொத்தம் ரூ.6,00,000 முதலீடு செய்யப்படும். தற்போதைய வட்டி விகிதம் (6.7%) மற்றும் காலாண்டு வட்டி சேர்த்து, உங்கள் முதலீடு matured ஆகும் போது ரூ.7,13,659 ஆக வளர்ந்து இருக்கும். அதாவது, எந்த ஆபத்தும் இல்லாமல் வெறும் 5 ஆண்டுகளில் ரூ.1,13,659 வட்டியைப் பெறுவீர்கள்.
முக்கிய அம்சங்கள்:
முதலீடு ரூ.100 இலிருந்து தொடங்கலாம்; அதிகபட்ச வரம்பு இல்லை.
திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைகிறது.
வரி மூலமாக விலக்கு கிடையாது.
ரூ.100 வருமானத்திற்கு மேற்பட்டவர்களுக்கு 10% TDS (Tax Deducted at Source) விதிக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு வருமானம் ரூ.50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே TDS பொருந்தும்.
அவசரப் பணத் தேவைக்கு, 1 ஆண்டிற்குப் பிறகு உங்கள் துவங்கிய தொகையின் 50% வரை கடனாக பெற்றுக்கொள்ளலாம்.
யார் திறக்கலாம்?
இந்தத் திட்டத்தில் இந்திய குடிமக்கள் முறையாக தபால் அலுவலகத்தில் RD கணக்கைத் திறக்கலாம். பெற்றோர்கள் தங்கள் 18 வயதுக்கு கீழான பிள்ளைகளுக்காகவும் கணக்கைத் திறக்கலாம்.
எப்படி தபால் RD கணக்கைத் திறக்கலாம்?
உங்கள் நெருங்கிய தபால் நிலையத்துக்கு செல்லுங்கள். கீழ்க்கண்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்:
ஆதார் அட்டை
PAN அட்டை
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
மொபைல் எண்
வங்கி பாஸ்புக் (அவசியமானால்)
உத்தரவாதமான வருமானத்தை விரும்புவோர் மற்றும் பாதுகாப்பான முதலீட்டு வழியைத் தேடும் அனைவருக்கும் தபால் அலுவலகத் தொடர்ச்சியான வைப்புத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.
தேவைப்பட்டால் இதில் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யலாம்.
வரி மூலமாக விலக்கு கிடையாது.
ரூ.100 வருமானத்திற்கு மேற்பட்டவர்களுக்கு 10% TDS (Tax Deducted at Source) விதிக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு வருமானம் ரூ.50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே TDS பொருந்தும்.
அவசரப் பணத் தேவைக்கு, 1 ஆண்டிற்குப் பிறகு உங்கள் துவங்கிய தொகையின் 50% வரை கடனாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகவும்.