Saturday, August 9, 2025
HTML tutorial

இனி மினிமம் பேலன்ஸ் ரூ.50 ஆயிரம் ; பிரபல வங்கி அறிவிப்பு

ஐசிஐசிஐ வங்கி புதிய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த புதிய விதி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வந்துள்ளது.

ஐசிசிஐசி-யின் திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ், பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.50,000 ஐ பராமரிக்க வேண்டும்.

நகர்ப்புற கிளை வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்திற்கு உயர்த்தியுள்ளது. கிராமப்புற கிளைகளுக்கு ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இது பற்றாக்குறையில் 6% அல்லது ரூ.500, இந்த இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அதுவாக நிர்ணயிக்கப்படும்.

சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகையையும் ஐசிஐசிஐ வங்கி கணிசமாக உயர்த்தியது, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News