ஏமன் நாட்டின் சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்படிருந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற, கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்கு மிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா் அகமது முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.