Saturday, July 12, 2025

கூகுள் குரோமிற்கு சவால் விடும் OpenAI-ன் புதிய பிரவுசர்!

OpenAI நிறுவனம் இணைய உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தனது முதல் AI அடிப்படையிலான வலை உலாவியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது கூகுள் குரோமை நேரடியாக சவால் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ChatGPT மற்றும் பல்வேறு AI முகவர்கள் (AI Agents) நேரடியாக உள்ளமைக்கப்பட்டிருப்பதால், பயனர்கள் இணையத்தில் செய்யும் பல பணிகளை விரைவாகவும், எளிதாகவும் முடிக்க முடியும்.

OpenAI-யின் இந்த முயற்சி, தற்போது உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கூகுள் குரோமை நேரடியாகத் தாக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

OpenAI-யின் ChatGPT-யை வாரத்திற்கு 500 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். இதனால், இந்த புதிய உலாவிக்கு பெரும் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news