சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பணி காரணமாக செங்கல்பட்டு- கடற்கரை புறநகர் ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு- கடற்கரை இடையே இயக்கப்படும் ரயிலும், செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு- கடற்கரை இடையே புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.