தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தனது அணியினரின் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது : அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது. வேண்டுமென்றால் இன்ஷியலை பயன்படுத்தி கொள்ளட்டும். என் பேச்சை கேட்காதவர்கள் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது என அவர் கூறியுள்ளார்.
பாமகவில் தந்தை- மகனுக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ராமதாஸ் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.