Saturday, July 5, 2025

‘இசட் பிளஸ் பாதுகாப்பு’ என்றால் என்ன?

இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது இந்திய அரசாங்கம் வழங்கும் மிக உயர்ந்த பாதுகாப்பு வகைகளில் ஒன்றாகும். உயிருக்கு மிகுந்த ஆபத்து உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

முக்கியமாக நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி, மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

இசட் பிளஸ் பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள்

ஒரு நாளைக்கு 36 பேர் கொண்ட பாதுகாப்பு குழு மூன்று வேளைகளில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் இதில் அடங்குவர்.

இந்த பாதுகாப்பு குழுவினருக்கு நவீன துப்பாக்கிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்படும்.

இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது இசட் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு அளிக்கும் மிக உயர்நிலை பாதுகாப்பு முறையாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news