Friday, June 20, 2025

”இன்னும் 12 நாட்கள் மட்டுமே” என்ன செய்ய போகிறது இஸ்ரேல்?

ஈரான் – இஸ்ரேல் இடையிலான சண்டை தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் கடந்த வாரம் அந்நாட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஏவி இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் மீது தாக்குதல் நடத்தி விட்டதாக ஈரான் புரட்சி ராணுவப்படை தெரிவித்து உள்ளது. ஆனால் இஸ்ரேல் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது. இந்தநிலையில் இன்னும் 10 முதல் 12 நாட்களுக்கு மட்டுமே இஸ்ரேலால், ஈரானை எதிர்த்து நிற்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இஸ்ரேலிடம் கைவசம் போதுமான ராணுவ தளவாடங்கள் இல்லை. அதேநேரம் ஈரானிடம் இன்னும் 1500க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களின் முழுபலத்தையும் பிரயோகித்து இஸ்ரேல், ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதே ராணுவ தளவாடங்கள் பற்றாக்குறைக்கு காரணமாகும். நிலைமை இப்படியே நீடித்தால், இஸ்ரேல் ராணுவம் இந்த போரில் மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும்.

எனவே ஈரானை எதிர்கொள்ள வேண்டும் என்றால், பலம்வாய்ந்த ஆயுதங்களை அந்நாடு தருவித்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் இந்த போரில் இஸ்ரேலுக்கு தான், தங்களின் முழு ஆதரவு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளன.

இதனால் ராணுவ தளவாடங்கள் விஷயத்தில் மேற்கண்ட நாடுகள், இஸ்ரேலுக்கு உதவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news