Sunday, April 20, 2025

இன்று முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை : கட்டணம் எவ்வளவு?

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏ.சி. மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று முதல் தினமும் காலை 7 மணி மற்றும் மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படுகிறது. மேலும் மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணி மற்றும் மதியம் 5.45 மணிக்கு இயக்கப்படுகிறது.

புறநகர் ஏ.சி. மின்சார ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

கடற்கரை – எழும்பூர் இடையே ரூ.35

கடற்கரை – மாம்பலம் இடையே ரூ.40

கடற்கரை – கிண்டி இடையே ரூ.60

கடற்கரை – தாம்பரம் இடையே ரூ.85

கடற்கரை – செங்கல்பட்டு இடையே ரூ.105

செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரூ.85

தாம்பரம் – எழும்பூர் இடையே ரூ.60 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Latest news