சர்ச்சை பேச்சு : அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு

கடந்த ஞாயிற்று கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் எழுந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related News

Latest News