Saturday, December 27, 2025

மதுபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆர். பாலக்குறிச்சியில் வைரவன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எம். அந்தோணி வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். புகாரின் பெயரில் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி அந்தோணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related News

Latest News