Friday, July 4, 2025

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் ஒரு நாடகம்- அண்ணாமலை விமர்சனம்

தமிழக பா.ஜ.க.வினர் தமிழக அரசை கண்டித்து வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பனையூரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நின்று தொடங்கிவைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களின் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது : யாருக்கும் பிரச்சனை ஏற்படுத்தாமல் வீட்டுக்கு வெளியே நின்று பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம். தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news