Tuesday, August 19, 2025
HTML tutorial

போக்குவரத்து விதிமீறல் : கடந்த இரண்டரை மாதத்தில் 82 ஆயிரம் வழக்குகள் பதிவு

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன்படி கடந்த இரண்டரை மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 82 ஆயிரத்து 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து சந்திப்புகளில் Stop Line-ஐ தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக 3 ஆயிரத்து 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேகமாக வாகனங்களை ஓட்டி சென்ற 677 பேர் மீதும், செல்போன் பேசி கொண்டு வாகனங்கள் இயக்கிய 3 ஆயிரத்து 328 பேர் மீதும், மதுபோதையில் வாகனங்களை ஓட்டிய 4 ஆயிரத்து 191 மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வணிக வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றதற்காக 7 ஆயிரத்து 383 வழக்குகளும், ஹெல்மெட் போடாமல் சென்றதற்காக 33 ஆயிரத்து 331 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News