Saturday, September 6, 2025

டெல்லியில் பாஜகவின் வெற்றி வருத்தத்திற்குரியது – பெ.சண்முகம் பேட்டி

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதால் பாஜக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Also Read : டெல்லியில் பாஜக வென்றால் அது தேசத்துக்கே பின்னடைவு – திருமாவளவன்

இந்நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பாஜக வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்திருப்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதற்கு I.N.D.I.A. கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே காரணம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே பாஜக-வை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். I.N.D.I.A. கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியை, அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்” என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News