மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 19 கிலோ தங்கமும், ரூ.3.80 கோடி ரொக்கமும் சிக்கியது. மேலும் 150 கோடி வரி ஏய்ப்பு செய்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டுக்குள் சிறிய குளம் இருப்பதை, ஆய்வு செய்தபோது, அதில் மூன்று முதலைகள் இருப்பது தெரியவந்தது. முதலைகள் வைத்திருப்பது சட்டவிரோதம் எனக்கூறி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.