மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி அரசு செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் மாஜி லட்கி பாஹின் திட்டத்தில் 90 லட்சம் பெண்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அடையாளச் சரிபார்ப்பு பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்காத காரணத்தாலும், அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளாலும் 24 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குகளைப் பெறுவதற்காக அவசர அவசரமாகப் பயனாளிகளைச் சேர்த்த பாஜக அரசு, தேர்தல் முடிந்தவுடன் நிதி நெருக்கடியைச் சமாளிக்கப் பல லட்சம் பெண்களைத் திட்டமிட்டு நீக்கிவிட்டதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
