பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஜம்மு பிராந்தியத்தில் ஆ.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லைப் பாதுகாப்பு படையினர் 8 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.