மெட்டா தனது நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக சுமார் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
செய்யறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டினால் ஐடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சமீபமாக ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் மெட்டா நிறுவனமும் கடந்த ஜனவரியில் 1,000-க்கும் மேற்பட்டோரும், பிப்ரவரி மாதம் சுமார் 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது மேலும் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
விற்பனை, மனிதவள மேலாண்மை, ஹார்டுவேர் ஆகிய பிரிவுகளில் இந்த ஆள்குறைப்பு நடக்கிறது. அதேநேரத்தில் இந்த பணியாளர்களுக்கு வேறு வேலைகள் வழங்கப்படுவது அல்லது வேறு நிறுவனங்களில் வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
