ஓபன் ஏஐ நிறுவனத்தின் செய்யறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி, அதன் பயனர்களைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அமெரிக்காவில் ஏழு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி செய்யறிவு தொழில்நுட்பத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் சாட்ஜிபிடி செய்யறிவு, தற்கொலைக்குத் தூண்டுவதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் 7 வழக்குகள் ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஏழு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
